சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.
கொரோனா காரணமாக CBSE 10-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து எனவும் CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.
இந்நிலையில், வழக்கறிஞர் மம்தா சர்மா 12 வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கொரோனா காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டால் முடிவு தாமதமாகும். மேலும், கொரோனா தொற்று காரணமாக லட்சக்கணக்கான மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வை ரத்து செய்வது தொடர்பான நோட்டீசை சிபிஎஸ்இ-க்கு அனுப்ப தவறிவிட்டதால் வழக்கை ஒத்திவைப்பதாகவும், சிபிஎஸ்இ-க்கு அனுப்ப மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், ஜூன் 1 ம் தேதி 12 வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்து அரசு இறுதி முடிவு எடுக்க உள்ளதாக அரசு முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது என நீதிபதிகள் மனுதாரரிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா..? என்பது குறித்து நாளை தெரியவரும்.
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…