சிபிஎஸ்சி பொதுத்தேர்வு 2021 – மாணவர்களுக்கான அறிவிப்பு..!

Published by
Rebekal

சிபிஎஸ்சி பொதுத் தேர்வு குறித்த பல்வேறு மாறுபட்ட கருத்துகள் பரப்பப்பட்டு வரும் நிலையில், மத்திய அமைச்சர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஆகியோரால் மாணவர்களுக்கு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என்று வதந்திகள் பரவி வந்த நிலையில், இது குறித்ததான முற்றுப்புள்ளிகளுக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரி மற்றும் தேர்வாணையம் சார்பில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேதிகள் மற்றும் எந்த இடத்தில் நடைபெறும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறித்த நேரத்தில் தகவல்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளின் தேதிகள் உட்பட தேர்வும் முடிந்துவிட்டது என தற்போது வெளியாகியுள்ள செய்தி தவறானது எனவும், இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே பதற்றத்தை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நிலை குறித்து தேர்வு வாரியம் நன்கு அறிந்து இருப்பதாகவும், எனவே சிபிஎஸ்சி எந்த முடிவெடுத்தாலும் அது அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து அதன் பின்பே உறுதிப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தேர்வு நடைபெறும் நேரம் மற்றும் இடம் குறித்த தகவல்கள் குறித்த நேரத்தில் வெளியிடப்படும் எனவும் இதற்கு முன்பதாக சிபிஎஸ்சி தேர்வு தேதிகள் குறித்து ஊடகங்களில் வெளியாகிய கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் ஆஃப்லைன் அல்லது எழுத்து முறையில் தேர்வுகள் நடத்தப்படும் எனவும், எப்போது நடத்தப்பட வேண்டுமென சிபிஎஸ்சி தேர்வு தேதிகள் குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. நேற்று மாணவர்களுடன் உரையாற்றும்போது கல்வி அமைச்சர் ரமேஷ் பேக்ரியால் அவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு போதுமான நேரம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மார்ச் மாதத்தில் தேர்வுகளை நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

32 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

1 hour ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

2 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

3 hours ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

3 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

5 hours ago