மத்திய அரசானது ஓடிடி தளங்கள், ஆன்லைன் செய்தி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது . அதனால் பல படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வந்தனர் . இதனால் பலர் ஓடிடி தளங்கள் வாயிலாக படங்களை கண்டு களித்தனர் . படங்கள் மட்டுமில்லாமல் செய்திகள், தொடர்கள் என அனைத்தும் ஓடிடி தளங்களில் ஒளிப்பரப்ப்பட்டு வந்தது .
ஆனால் இதே ஓடிடி தளத்தில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்களில் ஆபாச காட்சிகளும் , வன்முறை காட்சிகளும் இருப்பதாகவும் , அதனால் குடும்பத்துடன் இணைந்து ஓடிடியில் ஒரு சில படங்களை பார்க்க இயலவில்லை என்றும் புகார் அளித்திருந்தனர் . அதற்கு மத்திய அரசிடம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டது .
திரையரங்குகளில் ரிலீஸ் செய்யும் படங்கள் அனைத்தும் தணிக்கை குழுவிடமிருந்து சென்சார் வழங்கப்பட்ட பின்னரே திரையரங்குகளில் அந்த படம் ரிலீஸ் செய்ய அனுமதிக்கப்படும் . ஆனால் இது இணையதளம் வாயிலாக அதாவது ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் படங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லை . எனவே ஓடிடி தளங்களுக்கும் சென்சார் போன்ற கட்டுபாடுகளை செயல்படுத்த வேண்டும் என்றும், அப்போது தான் ஆபாச காட்சிகள் இல்லாமல் இருக்கும் என்றும் கோரிக்கை விடப்பட்டது .
இதனை கருத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு டிஜிட்டல் தளங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . எனவே அனைத்து ஆன்லைன் செய்தி நிறுவனங்கள், ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் திரைப்படங்கள், தொடர்கள், நிகழ்ச்சிகள் , ஓடிடி தளங்கள் உள்ளிட்ட அனைத்தும் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே டிஜிட்டல் மீடியாக்கள் மற்றும் ஓடிடி தளங்கள் அனைத்திற்கும் புதிய கட்டுபாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கருத்து வேறுபாடு உச்சத்தை எட்டியுள்ளது. அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில்…
மதுரை : நாளை (ஜூன் 1) மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று…
சென்னை :பாமக கட்சியில் தற்போது அன்புமணி தனியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்துவதும், தானே தலைவர் என அறிவிப்பதும், பதிலுக்கு…
சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமான நடிகர் ராஜேஷின் (75) உடல் இன்று நல்லடக்கம் செய்யப்டுகிறது. முன்னதாக,…
சென்னை : நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை…
அகமதாபாத் : 2025 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியன் பட்டம் வெல்ல இன்னும் இரண்டு போட்டிகள்…