இனி முதல் ஓடிடி படங்களுக்கும்  சென்சார்.! மத்திய அரசு உத்தரவு.!

Published by
Ragi

மத்திய அரசானது ஓடிடி தளங்கள், ஆன்லைன் செய்தி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது . அதனால் பல படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வந்தனர் . இதனால் பலர் ஓடிடி தளங்கள் வாயிலாக படங்களை கண்டு களித்தனர் . படங்கள் மட்டுமில்லாமல் செய்திகள், தொடர்கள் என அனைத்தும் ஓடிடி தளங்களில் ஒளிப்பரப்ப்பட்டு வந்தது .

ஆனால் இதே ஓடிடி தளத்தில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்களில் ஆபாச காட்சிகளும் , வன்முறை காட்சிகளும் இருப்பதாகவும் , அதனால் குடும்பத்துடன் இணைந்து ஓடிடியில் ஒரு சில படங்களை பார்க்க இயலவில்லை என்றும் புகார் அளித்திருந்தனர் . அதற்கு மத்திய அரசிடம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டது .

திரையரங்குகளில் ரிலீஸ் செய்யும் படங்கள் அனைத்தும் தணிக்கை குழுவிடமிருந்து  சென்சார் வழங்கப்பட்ட பின்னரே திரையரங்குகளில் அந்த படம் ரிலீஸ் செய்ய அனுமதிக்கப்படும் . ஆனால் இது இணையதளம் வாயிலாக அதாவது ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் படங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லை . எனவே ஓடிடி தளங்களுக்கும் சென்சார் போன்ற கட்டுபாடுகளை செயல்படுத்த வேண்டும் என்றும், அப்போது தான் ஆபாச காட்சிகள் இல்லாமல் இருக்கும் என்றும் கோரிக்கை விடப்பட்டது .

இதனை கருத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு டிஜிட்டல் தளங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . எனவே அனைத்து ஆன்லைன் செய்தி நிறுவனங்கள், ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் திரைப்படங்கள், தொடர்கள்,  நிகழ்ச்சிகள் , ஓடிடி தளங்கள் உள்ளிட்ட அனைத்தும் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே டிஜிட்டல் மீடியாக்கள் மற்றும் ஓடிடி தளங்கள் அனைத்திற்கும் புதிய கட்டுபாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது

Published by
Ragi

Recent Posts

“ஐயா தான் நமக்கு குலசாமி, குல தெய்வம்” – ராமதாஸை புகழ்ந்து பேசிய அன்புமணி.!

“ஐயா தான் நமக்கு குலசாமி, குல தெய்வம்” – ராமதாஸை புகழ்ந்து பேசிய அன்புமணி.!

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கருத்து வேறுபாடு உச்சத்தை எட்டியுள்ளது. அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில்…

30 minutes ago

முதல்வர் வருகை: ‘மதுரையில் கால்வாய் துணியால் மறைப்பு’ – ஆட்சியர் விளக்கம்.!

மதுரை : நாளை (ஜூன் 1) மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று…

1 hour ago

“பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நான் காரணமா? இதை கேட்டு கண்ணீர் வடித்தேன்” – ஜி.கே.மணி வேதனை!

சென்னை :பாமக கட்சியில் தற்போது அன்புமணி தனியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்துவதும், தானே தலைவர் என அறிவிப்பதும், பதிலுக்கு…

1 hour ago

”நடிகர் ராஜேஷின் இறுதி அஞ்சலிக்கு வந்தவங்கல பாத்தாலே தெரியும்” கனத்த இதயத்துடன் பேசிய ரஜினிகாந்த்..!

சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமான நடிகர் ராஜேஷின் (75) உடல் இன்று நல்லடக்கம் செய்யப்டுகிறது. முன்னதாக,…

2 hours ago

வேகமெடுக்கும் கொரோனா: ‘மக்கள் பதற வேண்டாம்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்!

சென்னை : நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை…

3 hours ago

இறுதிப்போட்டியை நோக்கி பயணம்.., நாளை குவாலிஃபயர் 2 சுற்றில் பஞ்சாப்பை வீழ்த்துமா மும்பை.!

அகமதாபாத் : 2025 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியன் பட்டம் வெல்ல இன்னும் இரண்டு போட்டிகள்…

5 hours ago