மத்திய அரசானது ஓடிடி தளங்கள், ஆன்லைன் செய்தி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது . அதனால் பல படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வந்தனர் . இதனால் பலர் ஓடிடி தளங்கள் வாயிலாக படங்களை கண்டு களித்தனர் . படங்கள் மட்டுமில்லாமல் செய்திகள், தொடர்கள் என அனைத்தும் ஓடிடி தளங்களில் ஒளிப்பரப்ப்பட்டு வந்தது .
ஆனால் இதே ஓடிடி தளத்தில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்களில் ஆபாச காட்சிகளும் , வன்முறை காட்சிகளும் இருப்பதாகவும் , அதனால் குடும்பத்துடன் இணைந்து ஓடிடியில் ஒரு சில படங்களை பார்க்க இயலவில்லை என்றும் புகார் அளித்திருந்தனர் . அதற்கு மத்திய அரசிடம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டது .
திரையரங்குகளில் ரிலீஸ் செய்யும் படங்கள் அனைத்தும் தணிக்கை குழுவிடமிருந்து சென்சார் வழங்கப்பட்ட பின்னரே திரையரங்குகளில் அந்த படம் ரிலீஸ் செய்ய அனுமதிக்கப்படும் . ஆனால் இது இணையதளம் வாயிலாக அதாவது ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் படங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லை . எனவே ஓடிடி தளங்களுக்கும் சென்சார் போன்ற கட்டுபாடுகளை செயல்படுத்த வேண்டும் என்றும், அப்போது தான் ஆபாச காட்சிகள் இல்லாமல் இருக்கும் என்றும் கோரிக்கை விடப்பட்டது .
இதனை கருத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு டிஜிட்டல் தளங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . எனவே அனைத்து ஆன்லைன் செய்தி நிறுவனங்கள், ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் திரைப்படங்கள், தொடர்கள், நிகழ்ச்சிகள் , ஓடிடி தளங்கள் உள்ளிட்ட அனைத்தும் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே டிஜிட்டல் மீடியாக்கள் மற்றும் ஓடிடி தளங்கள் அனைத்திற்கும் புதிய கட்டுபாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது
சென்னை : நடிகர் சூர்யா பிறந்தநாளை ஒட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘கருப்பு’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. சூர்யாவின்…
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 23, 2025) மான்செஸ்டரில்…
காபூல் : ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நடைபெற்ற ஷ்பகீஸா கிரிக்கெட் லீக் (Shpageeza Cricket League) டி20 போட்டியில் ஒரு…
சென்னை : 2025 ஜூலை 22 அன்று, சாத்தான்குளம் கொலை வழக்கில் ஒரு முக்கியமான திருப்பமாக, முதல் குற்றவாளியான முன்னாள்…
சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் சூர்யா நாளை தன்னுடைய 50-வது பிறந்த…
சென்னை : கடந்த ஜூலை 12ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 தேர்வுகளை மாநிலம் முழுவதும்…