#Corona:மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Published by
Edison

இந்தியாவில் 5 மாநிலங்களில் கொரோனா பரவலை தீவிரமாக கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்.

கடந்த சில மாதங்களில் இந்தியாவில் கொரோனா தொற்று வழக்குகளின் எண்ணிக்கையில் நீடித்த நிலையில்,தற்போது குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது.அதன்படி,கடந்த சில நாட்களாக நாட்டில் தினசரி 1000-க்கும் குறைவான புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால்,இன்றைய தினத்தில் மீண்டும் கொரோனா மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டுள்ளது.அந்த வகையில் கேரளா,ஹரியானா மகாராஷ்டிரா,டெல்லி மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில்,கேரளா,ஹரியானா மகாராஷ்டிரா,டெல்லி மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு,கொரோனா தொற்று பரவுவதைத் தொடர்ந்து கண்காணிக்கவும்,கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக,மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், கேரளா, ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் மிசோரம் ஆகிய மாநில அரசுகளுக்கு கடிதமும் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில்,கொரோனா பரவல் சிறிய அளவில் அதிகரித்து வருவதாகவும்,மேலும் கொரோனா அதிகரிக்கும் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக,தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கேட்டுக்கொண்டுள்ளார்.

.

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

13 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

14 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

14 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

15 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

15 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

16 hours ago