காலியாக உள்ள மத்திய அரசு பணியிடங்கள் வழக்கம்போல நிரப்பப்படும். புதிய பணிகள் மத்திய அரசின் அனுமதி பெற்றுதான் உருவாக்கப்படும் எனவும் மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், அவசரகால நிதி மற்றும் பொருளாதார சுமையை சமாளிக்க அரசு செலவினங்களை கட்டுப்படுத்த வேண்டும். எனவும், மத்திய அரசின் அனுமதி இன்றி புதிய பணியிடங்களை உருவாக்க கூடாது எனவும், மத்திய அரசு அலுவலகங்களில் செலவினங்களை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மத்திய நிதி அமைச்சகத்தின் இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பல்வேறு விவாதங்களை கிளப்பின.மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், ‘ இந்த புதிய நெறிமுறைகளானது, இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் செயலாகும். எனவும், மத்திய அரசானது தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது எனவும் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மத்திய நிதி அமைச்சகமானது, விளக்கம் அளித்துள்ளது. அதாவது, காலியாக உள்ள மத்திய அரசு பணியிடங்கள் வழக்கம்போல நிரப்பப்படும். புதிய பணியிடங்கள் தான் உருவாக்கப்படாது எனவும், யு.பி.எஸ்.சி போன்ற மத்திய அரசின் தேர்வுகள் மூலமாக காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என மத்திய நிதி அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…