காலி பணியிடங்களை நிரப்ப எந்தவித தடையும் இல்லை.! – மத்திய அரசு விளக்கம்.!

Published by
மணிகண்டன்

காலியாக உள்ள மத்திய அரசு பணியிடங்கள் வழக்கம்போல நிரப்பப்படும். புதிய பணிகள் மத்திய அரசின் அனுமதி பெற்றுதான் உருவாக்கப்படும் எனவும் மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், அவசரகால நிதி மற்றும் பொருளாதார சுமையை சமாளிக்க அரசு செலவினங்களை கட்டுப்படுத்த வேண்டும். எனவும், மத்திய அரசின் அனுமதி இன்றி புதிய பணியிடங்களை உருவாக்க கூடாது எனவும், மத்திய அரசு அலுவலகங்களில் செலவினங்களை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மத்திய நிதி அமைச்சகத்தின் இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பல்வேறு விவாதங்களை கிளப்பின.மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், ‘ இந்த புதிய நெறிமுறைகளானது, இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் செயலாகும். எனவும், மத்திய அரசானது தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது எனவும் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மத்திய நிதி அமைச்சகமானது, விளக்கம் அளித்துள்ளது. அதாவது, காலியாக உள்ள மத்திய அரசு பணியிடங்கள் வழக்கம்போல நிரப்பப்படும். புதிய பணியிடங்கள் தான் உருவாக்கப்படாது எனவும், யு.பி.எஸ்.சி போன்ற மத்திய அரசின் தேர்வுகள் மூலமாக காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என மத்திய நிதி அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

லாரி ஏறி பள்ளி சிறுமி பலி – கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்.!

லாரி ஏறி பள்ளி சிறுமி பலி – கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்.!

சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…

8 minutes ago

கைலாசா எங்கே? நித்தியானந்தா எங்கே? மதுரை கிளை சரமாரி கேள்வி.! நித்யானந்தா சீடர்கள் அளித்த பதில்.!

மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…

32 minutes ago

மருத்துவமனைக்கு ‘Jack Sparrow’ வேடத்தில் சென்று குழந்தைகளை மகிழ்வித்தார் ஜானி டெப்.!

ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…

2 hours ago

“ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்” – அமித் ஷா.!

டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…

2 hours ago

“என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் 100% பொய்யானவை” – அன்புமணி ராமதாஸ்.!

சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…

2 hours ago

”பாமக எம்எல்ஏக்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும்”- அன்புமணி.!

சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…

2 hours ago