மத்திய தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலாளர் குருபிரசாத் மொஹாபத்ரா கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார்.
மத்திய தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) செயலாளர் டாக்டர் குருபிரசாத் மொஹாபத்ரா,கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில்,இன்று காலை அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் டாக்டர் குருபிரசாத் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.எனினும், சிகிச்சை பலனின்றி குருபிரசாத் உயிரிழந்தார்.
இதனையடுத்து,டாக்டர் குருபிரசாத் மொஹாபத்ரா அவர்களின் மறைவிற்கு மத்திய ரயில்வே மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்ட பிற மத்திய அமைச்சர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் இருந்து 1986 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வான குருபிரசாத் அவர்கள் பல்வேறு துறைகளில் தனது முத்திரையை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…