மத்திய தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலாளர் குருபிரசாத் மொஹாபத்ரா கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார்.
மத்திய தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) செயலாளர் டாக்டர் குருபிரசாத் மொஹாபத்ரா,கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில்,இன்று காலை அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் டாக்டர் குருபிரசாத் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.எனினும், சிகிச்சை பலனின்றி குருபிரசாத் உயிரிழந்தார்.
இதனையடுத்து,டாக்டர் குருபிரசாத் மொஹாபத்ரா அவர்களின் மறைவிற்கு மத்திய ரயில்வே மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்ட பிற மத்திய அமைச்சர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் இருந்து 1986 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வான குருபிரசாத் அவர்கள் பல்வேறு துறைகளில் தனது முத்திரையை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…