“அனைத்து கார்களிலும் இனி இவை கட்டாயம்” – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு!

Published by
Edison

8 பேர் வரை பயணிக்கும் அனைத்து இந்திய கார்களிலும் 6 ஏர்பேக்குகள் கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், பயணிகள் கார்களுக்கு ஆறு ஏர்பேக்குகள் கட்டாயமாக்கும் ஜிஎஸ்ஆர் வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“8 பேர் வரை செல்லும் மோட்டார் வாகனங்களில் பயணிப்பவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில்,குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்கும் வரைவு ஜிஎஸ்ஆர் அறிவிப்பிற்கு நான் இப்போது ஒப்புதல் அளித்துள்ளேன்.இந்தியாவில் மோட்டார் வாகனங்களை முன்னெப்போதையும் விட பாதுகாப்பானதாக மாற்ற இது ஒரு முக்கியமான படியாகும்.” என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம்,மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகமானது,தற்போது வாகனங்களின் பின்பக்கத்தை பாதுகாப்பானதாக மாற்ற முயற்சிக்கிறது. அதாவது,பின்பக்க பயணிகளுக்கு நான்கு ஏர்பேக்குகள் சேர்ப்பதன் மூலம் பாதுகாப்பை அதிகரிக்கிறது மற்றும் அபாயகரமான காயங்கள் ஏற்படுவதை குறைக்கிறது.

Nitin Gadkari

கடந்த ஆண்டு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி,நாட்டில் உள்ள வாகன உற்பத்தியாளர்களிடம் ஆறு ஏர்பேக்குகளை வழங்குமாறு வலியுறுத்தியதோடு,ஏர்பேக் மற்றும் தேவையான வாகன மாற்றங்களுக்கான விலையை வழங்குமாறு ஏர்பேக் உற்பத்தியாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.அதனடிப்படையில்,ஏற்கனவே இரண்டு ஏர்பேக்குகளுடன் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில்,மேலும் நான்கு ஏர்பேக்குகளைச் சேர்ப்பதன் மூலம் அதன் விலை சுமார் ரூ.8,000-10,000 ஆக இருக்கும் என்றும்,ஒவ்வொரு ஏர்பேக்கின் விலை ரூ.1,800 முதல் 2,000 வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.இதனால்,வாகனங்களின் விலைகள் மேலும் சற்று உயரும் என எதிர்பார்க்கலாம்.

Recent Posts

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…

13 minutes ago

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

10 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

11 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

12 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

12 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

13 hours ago