சாத் பூஜை 2020 : நான்காவது நாளாக கொண்டாடப்பட்ட சப்தமி தினம்.!சாத் பூஜை 2020 : நான்காவது நாளாக கொண்டாடப்பட்ட சப்தமி தினம்.!

Published by
Ragi

சாத் பூஜையின் நான்காவது மற்றும் கடைசி நாளான இன்றைய சப்ததி தினத்தில் பக்தர்கள் சூரிய உதய நேரமான காலை 6:48 மணிக்கு முன் சூரிய கடவுளை வழிபாடு செய்து,பின் உணவை உண்டு நோன்பை முடிப்பார்கள்.

நாடு முழுவதும் சாத் பூஜையை மிகவும் உற்சாகமாக கொண்டாடுவார்கள் .நான்கு நாள் நடைபெறும் இந்த சாத் பூஜை திருவிழாவை குறிப்பாக பீகார் , ஜார்க்கண்ட், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆண்டுதோறும் கொண்டாடுவார்கள்.சூரிய கடவுளுக்காக செய்யப்படும் இந்த பூஜையில் அவரது துணைவியார் உஷா மற்றும் பிரதுஷா ஆகியோருக்கு நோன்பு இருந்து பிரார்த்தனை செய்வது வழக்கம்.காரத்திகை மாதத்தில் அனுசரிக்கப்படும் இந்த பூஜை , நடப்பாண்டில் நவம்பர் 18 முதல் 21 ஆம் தேதி வரை கொண்டாடுகின்றனர்.

இந்த பூஜைக்கு சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதய நேரங்கள் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது.இந்த பூஜையின் போது பக்தர்கள் காலை மட்டும் உணவு உண்டு நோன்பு இருப்பார்கள் . இந்த திருவிழாவின் முக்கிய நாள் என்பது மூன்றாவது நாளாகும்.

அந்த வகையில் நேற்றைய தினம் மூன்றாவது நாளை பக்தர்கள் கடைபிடித்தனர் .அந்த சாத் பூஜை நாளில் சூரிய உதயமானது காலை 06:48, சூரிய அஸ்தமனமானது மாலை 05:26 ஆகும் .அன்று சூரிய அஸ்தமன நேரத்தில் சூரிய கடவுளுக்கு பிரார்த்தனை செய்வார்கள்.

அதனையடுத்து நான்காவது மற்றும் கடைசி நாளான இன்று பக்தர்கள் சூரிய உதயத்திற்கு முன் சூரிய கடவுளை வழிபாடு செய்து,பின் உணவை உண்டு நோன்பை முடிப்பார்கள்.சப்தபி நாளான இன்றைய தினத்தின் சூரிய உதயம் காலை 6:48 மணியும் ,சூரிய அஸ்தமன நேரம் மாலை 5:24 மணியாகும் .கொரோனா அச்சம் காரணமாக இந்தாண்டு பக்தர்கள் சமூக விலகல் கடைப்பிடித்து ,முககவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறது.

Published by
Ragi

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

9 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

10 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

11 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

11 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

12 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

12 hours ago