Categories: இந்தியா

கர்நாடக தேர்தல் களத்தில் பரபரப்பு – உடைத்து நொறுக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Published by
பாலா கலியமூர்த்தி

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் அதிகாரிகளுடன் கிரமாக மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

கர்நாடகவில் மொத்தமுள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 வரை நடைபெறுகிறது. பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதன்படி, பாஜக 224, காங்கிரஸ் 223, மதசார்பற்ற ஜனதா தளம் 207, பகுஜன் சமாஜ் கட்சி 193 தொகுதிகளில் களமிறங்கியுள்ளன. கர்நாடக தேர்தலில் 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

கர்நாடக மாநிலம் முழுவதும் 58,282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி கர்நாடகாவில் 37.25% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த சமயத்தில், வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

அதாவது, கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டத்தின் மசபின்னலா கிராமத்தில் தேர்தல் அதிகாரிகளுடன் கிரமாக மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கோபத்தில் அதிகாரிகளின் வாகனத்தை சேதப்படுத்தி, வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து, அடித்து உடைத்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

வாக்குகள் பதிவான இயந்திரங்களை அதிகாரிகள் திட்டமிட்டு அறைக்கு மாற்றியதாக பரவிய செய்தியே வானுமரைக்கு காரணம் என காவல்துறை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த விவகாரம் தொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

2 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

2 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

3 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

4 hours ago

சொந்த ஊர் பீகார்.., தமிழில் 93 மார்க் எடுத்த மாணவி – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!

சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…

4 hours ago

மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்.., நீயா? நானா? போட்டியில் கமல் – சிம்புவின் ‘தக் லைஃப் டிரெய்லர்.!

சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…

5 hours ago