Categories: இந்தியா

கர்நாடக தேர்தல் களத்தில் பரபரப்பு – உடைத்து நொறுக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Published by
பாலா கலியமூர்த்தி

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் அதிகாரிகளுடன் கிரமாக மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

கர்நாடகவில் மொத்தமுள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 வரை நடைபெறுகிறது. பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதன்படி, பாஜக 224, காங்கிரஸ் 223, மதசார்பற்ற ஜனதா தளம் 207, பகுஜன் சமாஜ் கட்சி 193 தொகுதிகளில் களமிறங்கியுள்ளன. கர்நாடக தேர்தலில் 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

கர்நாடக மாநிலம் முழுவதும் 58,282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி கர்நாடகாவில் 37.25% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த சமயத்தில், வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

அதாவது, கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டத்தின் மசபின்னலா கிராமத்தில் தேர்தல் அதிகாரிகளுடன் கிரமாக மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கோபத்தில் அதிகாரிகளின் வாகனத்தை சேதப்படுத்தி, வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து, அடித்து உடைத்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

வாக்குகள் பதிவான இயந்திரங்களை அதிகாரிகள் திட்டமிட்டு அறைக்கு மாற்றியதாக பரவிய செய்தியே வானுமரைக்கு காரணம் என காவல்துறை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த விவகாரம் தொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…

34 minutes ago

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

59 minutes ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

2 hours ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

2 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

4 hours ago

கூட்டணி ஆட்சி வேண்டும் என நான் விரும்பவில்லை…மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு!

சென்னை :  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…

5 hours ago