Categories: இந்தியா

சத்தீஸ்கர், மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு நிலவரம்!

Published by
பாலா கலியமூர்த்தி

சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில், 12 மாவட்டங்கள், மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள பஸ்தார் பிராந்தியத்தில் உள்ளன.

இந்த பகுதியில் மொத்தம் சுமார் 2,900 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில், இதில் 650 வாக்குசாவடிகள் பதற்றம் நிறைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது. இதுபோன்று, மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு  நடைபெற்று வருகிறது. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 1276 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சத்தீஸ்கரில் குண்டுவெடிப்பு..! சிஆர்பிஎஃப் வீரர் காயம்..!

இதன் நிலையில், சத்தீஸ்கரில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கும், மிசோராமத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவின் 9 மணி நிலவரம் குறித்து பார்க்கலாம். அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி மிசோரம் மாநிலத்தில் 12.80% வாக்குகள் பதிவாகியுள்ளது. சத்தீஸ்கரில் 9.93% வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும், நாகாலாந்தின் தாபி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 29.03% வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரோஹித் – கோலி ஓய்வு பெற அழுத்தம் கொடுக்கப்பட்டதா? விளக்கம் கொடுத்த பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…

28 minutes ago

யூடியூப் புதிய விதிகள் : தரமற்ற வீடியோக்களுக்கு இனி காசு இல்லை!

யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது.  இதில் பலர்…

1 hour ago

’பென்ஸ்’ பட ஒளிப்பதிவாளரை திருமணம் செய்யப்போகும் நடிகை தான்யா!

சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…

2 hours ago

த.வெ.கவின் அடுத்த டார்கெட்…கோலாகலமாக நடந்த 2வது மாநாடு பந்தக்கால் நடும் விழா!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…

3 hours ago

நிமிஷா பிரியா வழக்கு : “ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சி” – ஏ.பி.அபூபக்கர்!

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…

3 hours ago

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…

4 hours ago