புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டார். முதல்வர் ரங்கசாமியை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் முன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, கடந்த 7ஆம் தேதி என்.ரங்கசாமி அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றார். இதனையடுத்து, இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின் சிகிச்சை முடிந்து, வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.
என்.ஆர் காங்கிரசை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் அவர்கள், காலை 9:30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் புதுவையின் சட்டப்பேரவை தற்காலிக தலைவராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதனை தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டார். முதல்வர் ரங்கசாமியை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் முன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் முடிவுகள் வந்து 23 நாட்களுக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…