முழுமையான பரிசோதனைக்கு பின் தான் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் – டெல்லி உயர்நீதிமன்றம்

Published by
லீனா

முழுமையான பரிசோதனைக்கு பின் தான் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனைகள் நடந்து வருகிறது. இதனையடுத்து, கொரோனா வைரசின் மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பதால் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இது தொடர்பாக பதிலளித்த மத்திய அரசு 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனைகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. வல்லுநர்கள் அனுமதி அளித்த பின் அதற்கான கொள்கைகள் உருவாக்கப்பட்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என தெரிவித்துள்ளது.

அப்போது குறுக்கிட்ட நீதிமன்றம் முழுமையான பரிசோதனைக்கு பின்பு தான் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, வழக்கின் விசாரணை வரும் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…

6 minutes ago

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

10 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

11 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

12 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

12 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

13 hours ago