கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட சீனா இன்று அதிகாலை 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை இந்தியாவுக்கு அனுப்பியதாக பெய்ஜிங்கிற்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா வைரஸை எதிர்த்து போராட மற்றும் விரைந்து செயல்பட சீனாவில் இருந்து இந்தியாவுக்கு 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரேபிட் டெஸ்ட் கிட் அனுப்பப்பட்டது தொடர்பாக சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சீனாவின் குவாங்சோ விமான நிலையத்தில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட் கருவி இந்தியாவுக்கு அதிகாலை விமானம் மூலம் அனுப்பப்பட்டது. மேலும் கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள இந்தியாவுக்கு ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் வந்த பிறகு மாநிலங்களுக்கு அவை பிரித்துக் கொடுக்கப்படும் என்று தகவல் கூறப்படுகிறது.
சீனாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான கடந்த இரண்டு மாத கால போராட்டத்துக்கு பிறகு அங்கு இயல்புநிலை திரும்பியுள்ளது. மேலும் அனைத்து தொழிற்சாலைகளும் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா உட்பட உலக முழுவதும் உள்ள முக்கிய மருத்துவப் பொருட்கள், குறிப்பாக வென்டிலேட்டர்கள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) ஏற்றுமதி செய்வதற்கான மிக பெரிய வணிக வாய்ப்புகளை சீனா கேட்டு வருகிறது. இந்த தயாரிப்புகளை இறக்குமதி செய்வதற்கான உத்தரவுகளை தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் வழங்குகின்றன. இதனிடையே இந்தியாவிற்கு ஏற்கனவே மருத்துவ கருவிகளின் இரண்டு முக்கிய பொருட்கள் சீனாவிலிருந்து அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…