சிபிஎஸ்சி தேர்வை தொடர்ந்து சிஐஎஸ்சிஇ தேர்வு ரத்து..!

ஐ.சி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக CBSE மற்றும் CISCE 10-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து எனவும் CBSE மற்றும் CISCE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.
இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பாகவும், பெற்றோர்கள் சார்பாகவும் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடந்தனர். இதையெடுத்து, பிரதமர் மோடி இன்று மாலை 12 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக மத்திய கல்வி உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனையில் கொரோனா பரவல் காரணமாக CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சிபிஎஸ்இ(CISCE) தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு இப்போது ஐ.சி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதிப்பெண்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு செயல்முறை விரைவில் முடிவு செய்யப்படும் எனவும் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு பின்னர் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025