கிழக்கு அகர்தலாவில் பாஜக-கம்யூனிஸ்ட் இடையே நடைபெற்ற மோதலில் மூன்று பத்திரிகையாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திரிபுரா மாநிலம், கிழக்கு அகர்தலாவில் உள்ள கயர்பூர் பகுதியில் பாஜக-கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே கடும் மோதல் நடைபெற்றது. ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி தாக்குதலில் ஈடுபட்டனர். மதியம் தொடங்கிய இந்த மோதல், நள்ளிரவு வரை நடைபெற்றதாகவும், இந்த மோதலில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கிழக்கு அகர்தலாவில் நடந்த இந்த தாக்குதல் நள்ளிரவு வரை தொடர்ந்ததாகவும், இதில் செய்திகளை சேகரிக்க சென்ற 3 பத்திரிகையாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 10 வீடுகள், சில மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு கொளுத்தப்பட்தாக கூறப்பட்டுள்ளது. பின்னர், கூடுதல் படைகளை அமர்த்திய பின் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இருப்பினும் போலீசார், தங்களின் விசாரணையைத் தொடங்கினர்.
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…