கேரளாவின் இளம் வயது விமானிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன்..!

Published by
Sharmi

கேரள கிராமத்தில் பிறந்த 21 வயது ஜெனிஜெரோம் தற்போது கேரள இளம் வயது பெண் விமானியாக உயர்ந்ததை எண்ணி முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கரக்குளம்  கிராமத்தில் பிறந்தவர் ஜெனிஜெரோம்.  இவரின் பெற்றோர் பியாஸ்ட்ரா, ஜெரோம் ஆவர். ஜெனிஜெரோம் பள்ளிப்பருவத்திலிருந்து தான் ஒரு விமானியாக வேண்டும் என்ற கனவோடு இருந்தது மட்டுமல்லாது அதை நிஜமாகவும் மாற்றியுள்ளார்.

21 வயதான ஜெனிஜெரோம் நேற்று முன்தினம் சார்ஜாவிலிருந்து திருவனந்தபுரம் புறப்பட்ட ஏர் அரேபியா ஜி 9-449 என்ற விமானத்தை திருவானந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கி சாதனை படைத்துள்ளார். ஜெனிஜெரோமின் சாதனைக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இவர் பிறந்த கரக்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இளம் வயது கேரள விமானிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர், கேரளாவின் இளம் வயது விமானியாக சாதனை படைத்த ஜெனிஜெரோமிற்கு எனது வாழ்த்துக்கள். உங்களின் சாதனையை பகிர்வதில் கேரளாவும் மகிழ்ச்சியடைகிறது. இளம் வயது கனவை நனவாக்கிய ஜெனிஜெரோமின் வாழ்க்கை பலருக்கும் ஒரு முன் உதாரணமாக அமையும். சமூகத்தில் பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளார். மேலும், ஜெனிஜெரோமின் ஆசையை நிறைவேற்ற துணை நின்ற அவரது பெற்றோருக்கும் வாழ்த்துக்கள். ஜெனிஜெரோம் அவரது வாழ்க்கையில் மேலும் உயர வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Published by
Sharmi

Recent Posts

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

3 hours ago

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

4 hours ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

4 hours ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

5 hours ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

5 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

6 hours ago