திறப்பா???!நவம்பரில் கல்லூரிகள் -விளக்கும் ரமேஷ் பொக்ரியால்!

Published by
kavitha

நவ.,1 முதல் கல்லுாரிகளை திறக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், வாரத்தில் ஆறு நாட்கள் கல்லுாரியை நடத்தவும்,குளிர் மற்றும் கோடை கால விடுமுறை நாட்களை ரத்து செய்யவும்  பரிந்துரைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் 25 ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கு முன்பே நாடு முழுதும், மார்ச், 16ம் தேதி முதல், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டது. இதன்பின் பல தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

கொரோனா பரவலால், நடப்பு கல்வியாண்டில் திட்டமிட்டபடி, பள்ளி, கல்லுாரிகளை திறக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. செப்டம்பர் மாதத்தில், கல்லுாரிகளை திறக்க, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் சற்றும் குறையாததால், இதை செயல்படுத்த முடியவில்லை.

இதையடுத்து, இந்த கல்வியாண்டில், குறைந்த நாட்களை ஈடுகட்டும் வகையில், கல்லுாரிகளை நடத்துவது பற்றிய பரிந்துரைகளை தெரிவிக்க, வல்லுனர் குழு ஒன்றை யு.ஜி.சி அன்மையில்அமைத்தது.

இந்நிலையில் இது குறித்து  மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தனது ட்விட்டர் பதிவில் கூறியிருந்தாவது:

முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லுாரிகளை திறப்பது பற்றி, யு.ஜி.சி., அளித்த பரிந்துரையை, மத்திய கல்வி அமைச்சகம் ஏற்றுக் கொண்டு உள்ளது. நவ., 1ம் தேதி முதல் கல்லுாரிகளை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது பற்றி, யு.ஜி.சி., தெரிவித்துள்ள விதிமுறை பின்பற்ற, பல்கலைகளை மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது என்று தனது பதிவில் அவர் கூறியுள்ளார்.

கொரோனா பரவல் குறையாத நிலையிலும், ஆந்திரா, அசாம் உட்பட பல மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு வரை, கடந்த, 21ம் தேதி முதலே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.மேலும் பல மாநிலங்களில், காலாண்டு தேர்வு முடிந்து, அக்., 5ம் தேதி முதல், 9 – 12 வகுப்பு வரை, பள்ளிகளை முழுமையாக திறக்க ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தான், கல்லுாரிகளை, நவம்பர் 1ம் தேதி முதல் திறக்க, மத்திய அரசு அனுமதியளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் கல்லுாரிகளை திறக்க வேண்டும் என, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Published by
kavitha

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

6 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

6 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

6 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

8 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

8 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

9 hours ago