திறப்பா???!நவம்பரில் கல்லூரிகள் -விளக்கும் ரமேஷ் பொக்ரியால்!

Published by
kavitha

நவ.,1 முதல் கல்லுாரிகளை திறக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், வாரத்தில் ஆறு நாட்கள் கல்லுாரியை நடத்தவும்,குளிர் மற்றும் கோடை கால விடுமுறை நாட்களை ரத்து செய்யவும்  பரிந்துரைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் 25 ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கு முன்பே நாடு முழுதும், மார்ச், 16ம் தேதி முதல், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டது. இதன்பின் பல தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

கொரோனா பரவலால், நடப்பு கல்வியாண்டில் திட்டமிட்டபடி, பள்ளி, கல்லுாரிகளை திறக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. செப்டம்பர் மாதத்தில், கல்லுாரிகளை திறக்க, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் சற்றும் குறையாததால், இதை செயல்படுத்த முடியவில்லை.

இதையடுத்து, இந்த கல்வியாண்டில், குறைந்த நாட்களை ஈடுகட்டும் வகையில், கல்லுாரிகளை நடத்துவது பற்றிய பரிந்துரைகளை தெரிவிக்க, வல்லுனர் குழு ஒன்றை யு.ஜி.சி அன்மையில்அமைத்தது.

இந்நிலையில் இது குறித்து  மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தனது ட்விட்டர் பதிவில் கூறியிருந்தாவது:

முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லுாரிகளை திறப்பது பற்றி, யு.ஜி.சி., அளித்த பரிந்துரையை, மத்திய கல்வி அமைச்சகம் ஏற்றுக் கொண்டு உள்ளது. நவ., 1ம் தேதி முதல் கல்லுாரிகளை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது பற்றி, யு.ஜி.சி., தெரிவித்துள்ள விதிமுறை பின்பற்ற, பல்கலைகளை மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது என்று தனது பதிவில் அவர் கூறியுள்ளார்.

கொரோனா பரவல் குறையாத நிலையிலும், ஆந்திரா, அசாம் உட்பட பல மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு வரை, கடந்த, 21ம் தேதி முதலே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.மேலும் பல மாநிலங்களில், காலாண்டு தேர்வு முடிந்து, அக்., 5ம் தேதி முதல், 9 – 12 வகுப்பு வரை, பள்ளிகளை முழுமையாக திறக்க ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தான், கல்லுாரிகளை, நவம்பர் 1ம் தேதி முதல் திறக்க, மத்திய அரசு அனுமதியளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் கல்லுாரிகளை திறக்க வேண்டும் என, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Published by
kavitha

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

5 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

5 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

7 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

8 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

8 hours ago