Categories: இந்தியா

மேற்கு வங்க ஆளுநருக்கு எதிரான பாலியல் புகார்.! தற்போதைய நிலவரம் என்ன.?

Published by
மணிகண்டன்

C.V.Ananda Bose : மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் புகார் பதியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கொல்கத்தா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது, ஆளுநர் மாளிகையில் வேலை செய்து வந்த பணிப்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். கொல்கத்தா காவல் நிலையத்தில் இதுகுறித்து தனது புகாரை அந்த பெண் அளித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் பலர் இந்த பாலியல் விவகாரத்தில்  பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து, ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் கூறுகையில், உண்மை வெல்லும். கற்பனை கதைகளால் நான் பயப்பட மாட்டேன். யாரேனும் என்னை இழிவுபடுத்தி தேர்தல் ஆதாயம் பெற விரும்பினால், கடவுள் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும். இவர்களால் என்மீது களங்கம் ஏற்படுத்த முடியும். ஆனால் மேற்கு வங்கத்தில் மக்கள் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிராக போராடி வருவதை அவர்களால் நிறுத்த முடியாது என்று சி.வி.ஆனந்த போஸ் கூறினார்.

இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், பிரதமர் மோடி விரைவில் கொல்கத்தாவிற்கு தேர்தல் பயணமாக வர உள்ளார். அப்போது, ஆளுநர் மாளிகையில் தான் தங்குவார். அந்த சமயம் இந்த புகார் குறித்து ஆளுநரிடம்  கேட்பாரா.? சமூகநீதி பற்றி பேசும் பிரதமர் மோடி, அமித்ஷா இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வாங்கி தர வேண்டும் என தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆளுநர் மாளிகை பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் குறித்து கொல்கத்தா காவல்துறை சார்பில் கூறுகையில்,  நாங்கள் அந்த புகாரை தீவிரமாக விசாரித்து வருகிறோம். புகாரில் உள்ள விவரத்தை தங்களால் பகிர முடியாது என்றும், புகாரின்படி, இந்த சம்பவம் ராஜ்பவனில் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல முறை இந்த சம்பவம் நடந்ததாகவும் புகார்தாரர் குறிப்பிட்டுள்ளார் என்றும் கொல்கத்தா காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

16 minutes ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

1 hour ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

2 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

2 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

3 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

4 hours ago