பஞ்சாயத்து நிர்வாகத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட பாதை தகராறில் இருதரப்பினர் மோதி சண்டையிட்டு 4 பேர் காயமடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள ஆராட்டுப்புழா பகுதியில் பஞ்சாயத்து நிர்வாகத்தால் தயார் செய்யப்பட்ட பாதையை ஒரு தரப்பினர் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால், அதனை மற்றொரு தரப்பினர் அடைப்பதற்கும் முயற்சித்ததால் இந்த இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆண் பெண் என்று பாராமல் இருவரும் சரமாரியாக ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…