Categories: இந்தியா

ஊழல், கலவரம் உள்ளிட்டவையில் ராஜஸ்தானை நம்பர் 1 ஆக்கியது காங்கிரஸ் .. கடைசி நாள் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி!

Published by
பாலா கலியமூர்த்தி

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு மற்றும் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி அறிவிக்கப்படும். ராஜஸ்தானில் தற்போது முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இதனால், இம்முறையும் நடைபெறும் தேர்தலில் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் பல்வேறு கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

ஆனால், இம்மாநிலத்தில் இதுவரை எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்தது கிடையாது என்று வரலாறு உள்ளது. இதனால் ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், இன்று கடைசி நாளில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டார்.

காங்கிரஸ் அரசுக்கு விடைகொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர்.! அமித்ஷா பேட்டி.!

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியின் கீழ், கலவரம், குற்றம், ஊழல், தகவல் கசிவு போன்றவற்றில் மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் அரசை கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறியதாவது, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கப் போகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால், சுற்றுலா, முதலீடுகள், தொழில்கள் மற்றும் கல்வியில் மாநிலத்தை “நம்பர் ஒன்” ஆக மாற்றுவோம்.

கலவரங்கள், குற்றம், ஊழல் மற்றும் காகித கசிவுகளில் (காங்கிரேசின் ஐந்தாண்டு ஆட்சியில்) ராஜஸ்தானை முதலிடத்திற்கு உயர்த்தியது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து திட்டங்களையும் காங்கிரஸ் அரசு நிறுத்திவிட்டதாக குற்றம்சாட்டினார். அதாவது, ஐந்தாண்டுகளுக்கு முன், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், எங்களது அனைத்து திட்டங்களையும் நிறுத்திவிட்டனர்.

15 சீட்களை பாஜக தாண்டுமா என பார்ப்போம்.! சத்தீஸ்கர் மாநில முதல்வர் விமர்சனம்.!

எதிரணியில் உள்ள தலைவர்கள் மோடியை தாக்கிப் பேசினால் அவர்களது வேலை முடிந்துவிட்டதாக நினைக்கின்றனர். அவர்களுக்கு பாஜகவின் வலிமை புரியவில்லை. ராஜஸ்தானின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக இத்தனை பெண்களும் கூடியுள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பளிக்காத காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பளிக்க மாட்டார்கள். டிசம்பர் 3ம் தேதி, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மாநில மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை முன்னெடுப்போம். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Recent Posts

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…

4 hours ago

நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…

4 hours ago

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

5 hours ago

மாணவர்களே ஜூன் 2 பள்ளிகள் திறப்பு! முன்னேற்பாடு செய்ய உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை!

சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…

5 hours ago

“உங்க ரத்தம் கேமரா முன் மட்டும் ஏன் கொதிக்கிறது?” -பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…

6 hours ago

கட்டுப்பாட்டை இழந்த கார்…விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி!

கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…

6 hours ago