சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு.. நிலைமை மோசமாக உள்ளது.! காங்கிரஸ் எம்எல்ஏ பரபரப்பு தகவல்.!

Published by
மணிகண்டன்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாளுக்கு நாள் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதனால் அங்கு பக்தர்கள் தரிசன காத்திருப்பு நேரம் என்பது கூடிக்கொண்டே செல்கிறது. தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டாலும் பக்தர்கள் காத்திருப்பு நேரத்தை குறைக்க முடியவில்லை. இதனால் சபரிமலை செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. சபரிமலையில் தரிசன நேரம் நீட்டிப்பு..!

சபரிமலை பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய கோட்டயம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு சபரிமலை, நிலக்கல், பம்பை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு சென்றது. அந்த ஆய்வு முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.  இதனை கட்டுப்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என தெரிவித்தார்.

பம்பைவில், பக்தர்கள் தண்ணீர் அல்லது உணவு இல்லாமல் 8-9 மணி நேரம் வெயிலில் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். இந்த நிலை செயற்கையாக உருவாக்கப்பட்டது. பம்பைவில் ஒரே நேரத்தில் 15,000 யாத்ரீகர்கள் தங்கும் வகையில் ஒரு ஓய்விடம் இருந்தது. இருப்பினும், இந்த வசதி 2018 வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது, இரண்டு சிறிய ஓய்வு இடங்கள் மட்டுமே உள்ளன.

நிலக்கல் பகுதியிலும் குழுவினர் ஆய்வ செய்தனர். குளிரூட்டிகள்(AC) இயக்கப்படாமல் 100 முதல் 150 பக்தர்கள் வரையில் பேருந்துகளில் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். குழு பின்னர் பம்பையில் ஆய்வு கூட்டத்தை நடத்தியது.  அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் எதிர்கொள்ளும் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க குழு முடிவு செய்யபட்டுள்ளது என்றும் காங்கிரஸ் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் கூறினார்.

Recent Posts

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

11 minutes ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

13 minutes ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

52 minutes ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

3 hours ago