Congress leader Jairam Ramesh. (PTI Photo)(HT_PRINT)
அரசியல் சாசனத்துக்கு விரோதமாக மாநிலங்களுக்கான நிதியை குறைக்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பான ஆடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு, பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடியின் அரசியல் சாசன விரோத செயலை நிதி ஆயோக் தலைமை அதிகாரி வெளிப்படுத்தியுள்ளார்.
14வது நிதிக் குழுவை மிரட்டி, மாநில அரசுகளின் வரி வருவாயில் இருந்து திருட அனுமதிக்கும் வகையில், பிரதமர் மோடியே அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு கொடூரமான முயற்சியை மேற்கொண்டதாக அந்த அதிகாரி வெளிப்படுத்தியுள்ளார். மாநிலங்களுக்கான நிதியை பிரதமர் தடுக்க முயன்றது அரசியல் சாசனத்துக்கு முரணானது. மத்திய வரியில் 42% பங்கை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க 14-ஆவது நிதிக்குழு பரிந்துரை செய்தது.
தரையில் உறங்கி, தேங்காய் தண்ணீர் குடித்து கடும் விரதத்தில் பிரதமர் மோடி!
ஆனால், பிரதமர் மோடியே நிதிக்குழு பரிந்துரை செய்த பெருமளவு குறைக்க விரும்பியுள்ளார். நிதி குறைப்பு முயற்சியில் தோல்வியுற்ற பிரதமர் மோடி அரசு, 48 மணிநேரத்தில் முழு பட்ஜெட்டையும் மறுசீரமைத்துள்ளது. இதனால் தான் சமூக நலத் திட்டங்களுக்கான நிதியைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஒவ்வொரு அடுக்குகளிலும் உண்மையை மறைக்க முயன்றது மோடி அரசின் பட்ஜெட்டில் வெளிப்பட்டுள்ளது. அரசியலமைப்பு அமைப்புக்கான இந்த அப்பட்டமான அலட்சியம், பிரதமரின் உண்மையான நிலை, கட்டுப்பாடு மற்றும் இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையை சிதைப்பது ஆகியவற்றை அம்பலப்படுத்துகிறது.
எனவே, அரசியல் நீதியை உறுதிப்படுத்தவும், கூட்டாட்சியை வலுப்படுத்தவும், அம்பேத்கரின் அரசியலமைப்பை நிலைநிறுத்தவும், இந்தியா, மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் என்று கூறி, பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல்காந்தி முன்னின்று நடத்துவதற்கு இதுவும் ஒரு காரணம் என்றுள்ளார்.
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…