பிரதமரின் ‘பிஎம் கேர்ஸ்’-க்கு சட்ட அனுமதி இன்றி நிதி திரட்டல்.? காங்கிரஸ் மூத்த தலைவர் சரமாரி கேள்வி.!

Published by
மணிகண்டன்

பிரதமரின் நிவாரண நிதி அமைப்பான பிஎம் கேர்ஸ் குறித்து பல்வேறு குற்றசாட்டுகளை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி பிஎம் கேர்ஸ் பற்றி பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறுகையில், பிரதமரின் நிவாரண நிதி திட்டத்தின் கீழ் 5000 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ள இந்த நிதி மேலாண்மைக்கு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும், அதற்கு அதிக பொறுப்புகள் இருக்க வேண்டும் எனவும் அபிஷேக் சிங்வி கூறினார். நாட்டின் உயர்மட்டத்தில் இருக்கும் பிரதமர் அலுவலகமானது எந்தவித சட்ட அனுமதியும் இன்றி பணத்தை வசூல் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து கிட்டத்தட்ட 60 சதவீத நிதியை பிரதமரின் நிவாரண நிதிக்காக பெற்றுள்ளதாகவும், இந்த நிதி வசூலானது அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளை மீறி உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

எந்த ஒரு சட்ட அனுமதியும் இல்லாமல் மாநில அரசுகளானது மிகப்பெரிய தொகையை நிவாரணமாக திரட்ட முடியாது. ஆனால் இங்கே மத்திய அரசு எந்தவித சட்ட அனுமதியும் இல்லாமல் 5000 கோடி ரூபாயை நிவாரணமாக பெற்றுள்ளது. இதற்கு யார் பொறுப்பாகும்? இதனை யார் கண்காணிப்பு செய்வார்கள்? என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை பிரதமரின் நிவாரண நிதி தொடர்பாக காங்கிரஸ் முக்கிய தலைவர் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி  முன்வைத்தார்.

பிரதமரின் நிவாரண நிதி அமைப்பின் இந்த வெளிப்படுத்தன்மையற்ற கொள்கையானது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், குற்றம் சாட்டிய அபிஷேக், இந்த நிதி திரட்டலில் முழுதாக ரகசியம் மறைக்கப்பட்டுள்ளது என்றும், இதில் யார் யார் நன்கொடை கொடுத்தார்கள் என்ற விவரம் வெளிப்படையாக தெரியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதனை உரிய ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இதனை அரசு அதிகாரிகள் தணிக்கை செய்ய வேண்டும் என்றும் அபிஷேக் சிங்வி வலியுறுத்தினார்.

பிஎம் கேர்ஸ் நிதி மேலாண்மை தொடர்பாக கடந்த ஆறு வருடங்கள் ஆகியும் வெள்ளை அறிக்கையை பிரதமர் அலுவலகம் வெளியிடாது ஏன்? பணம் எங்கே செலவிடப்படுகிறது என்றும் பல்வேறு குற்றசாட்டுகளை பிரகாஷ் சிங்வி முன்வைத்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கடும் விளைவுகளை சந்திப்பார்”! புது கட்சி தொடங்கிய மஸ்கிற்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

“கடும் விளைவுகளை சந்திப்பார்”! புது கட்சி தொடங்கிய மஸ்கிற்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு முழு ஆதரவு அளித்த தொழிலதிபர் எலான் மஸ்க், ட்ரம்ப் மீண்டும்…

42 minutes ago

தக் லைஃப் படத்திற்காக சிம்புவை விட அதிக சம்பளம் வாங்கிய த்ரிஷா?

சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான தக் லைஃப் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில்…

2 hours ago

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்…ஆர்.எஸ்.பாரதி பதிலடி!

சென்னை : நேற்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு  திமுகவை…

2 hours ago

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை…நாளை இந்த 9 மாவட்டங்களில் வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,நாளை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…

2 hours ago

நேஷன்ஸ் லீக் கால்பந்து: ஸ்பெயினை வீழ்த்தி கோப்பையை வென்ற போர்ச்சுகல்!

பெர்லின் : 2024-25 நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நள்ளிரவு…

3 hours ago

கூட்டணிக்காக பாஜகவில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை‌: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்!

சென்னை : தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பாஜகவிடம் இருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லை எனத்…

3 hours ago