தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகிய ஷிரோமணி அகாலிதளத்திற்கு காங்கிரஸ் ஆதரவு.!

Published by
கெளதம்

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகிய ஷிரோமணி அகாலிதளத்திற்கு ஆதரவை தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்வந்துள்ளது.

வேளாண் சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாகளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.

இதனிடையே, வேளாண் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக ஷிரோமணி அகாலிதளம் கடந்த சனிக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறுவது இது மூன்றாவது முறை ஆகும். இது தொடர்பாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகிய ஷிரோமணி அகாலிதளத்திற்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேசிய செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான டெரெக் ஓ பிரையன் ஒரு ட்வீட்டில் கட்சியின் ஆதரவை தெரிவித்துள்ளார். அதில், “சுக்பீர் சிங் பாடல் மற்றும் விவசாயிகளுடன் அகாலி தளத்தின் நிலைப்பாட்டிற்கு நாங்கள் ஆதரிக்கிறோம். விவசாயிகளுக்காக போராடுவது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதியாகும்.

கடந்த 2006 ஆம் ஆண்டில், மம்தா பானர்ஜி விவசாயிகளின் உரிமைகளுக்காக வரலாற்று சிறப்புமிக்க 26 நாள் விரதத்தில் தனது உயிரைப் பணயம் வைத்தார். மாநிலங்களின் பங்கு, MSP, PDS மற்றும் கொள்முதல் ஆகியவற்றிற்கு ஆபத்தை விளைவிப்பதால் நாங்கள் இதை எதிர்க்கிறோம் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

 

Published by
கெளதம்

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

39 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

2 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

4 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago