மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. 288 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் பாஜக 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
பாஜக 105 இடங்களிலும் , சிவசேனா கட்சி 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும் , காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றனர். கூட்டணிக்கட்சிகளான சிவசேனா மற்றும் பாஜக இடையே ஆட்சி பங்கீட்டில் பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
அதிக இடங்களை பெற்ற கட்சியான பாஜக அழைத்து ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். போதிய ஆதரவு கிடைக்காததால் அதை நிராகரித்தது.பின்னர் சிவசேனாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இதை தொடர்ந்து சிவசேனா , தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இதனால் இன்று காங்கிரஸ் சோனியாகாந்தி வீட்டில் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சிவசேனா ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி வெளியே இருந்து ஆதரவு கொடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…