இன்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா காங்கிரஸின் ‘டூல்கிட்’ சமூக ஊடகங்களில் சுற்றி வருவதாகக் கூறி, நாட்டில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் பிரதமரையும், இந்திய அரசாங்கத்தையும் அவதூறு பரப்ப காங்கிரஸ் முயல்வதாக கூறினார். தொற்றுநோயைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி எவ்வாறு தன்னை வலுப்படுத்த விரும்புகிறது என்பதை ‘டூல்கிட்’ எடுத்துக்காட்டுகிறது.
இது நாட்டில் தவறான தகவல்களை பரப்புவதற்கான நோக்கங்களையும் அதன் முயற்சிகளையும் அம்பலப்படுத்தியுள்ளது என்று கூறினார். ‘டூல்கிட்’ கீழ் பட்டியலிடப்பட்டுள்ளதை கூறிய சமித் பத்ரா, பிரதமர் மோடியின் உருவத்தை பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
சமூக ஊடகங்களில் மோடியின் இயலாமையை கேள்வி எழுப்புவது போல் உருவாக்கப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்தவும்.இவற்றை கையாள்வது மோடி அல்லது பாஜக ஆதரவாளர்கள் போல் இருக்க வேண்டும். வெளிநாட்டு வெளியீடுகளில் ரோப்பிங் என்று கூறுவர். இந்த வகையான வலை சுழற்றப்படுகிறது.இது சர்வதேச ஊடகங்களில் நடப்பதை நாங்கள் காண்கிறோம். காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் இதன் பின்னணியில் இருப்பதை இப்போது நாங்கள் அறிவோம், ”என்றார்.
கொரோனா தொற்றுநோயால் நாடு தத்தளிக்கும்போது மத்திய அரசை குறிவைக்கும் ‘டூல்கிட்டில் நரேந்திர மோடி & பாஜக மற்றும் கொரோனாவில் தவறான நிர்வாகம் என காங்கிரஸ் வெளியிட்டுள்ளது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
டூல்கிட்டில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களால் எடுக்கப்பட வேண்டிய தொடர்ச்சியான நடவடிக்கைகள், சில ஊடக வெளியீடுகளுடன் இணைந்து மோடி அரசாங்கத்தையும், பாஜகவை குறிவைக்கின்றனர். ‘கும்பமேளா’ குறித்து ஊடகங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களில் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக பாஜகவை குற்றம் சாட்டியுள்ளது.
“சூப்பர் ஸ்ப்ரெடர் கும்ப” என்ற வார்த்தையை தொடர்ந்து நினைவுபடுத்துவது முக்கியம். பாஜகவின் இந்து அரசியல் தான் இவ்வளவு துன்பத்தை ஏற்படுத்துகிறது என்று மக்கள் கூறுகின்றனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. PMCARE பற்றி கேள்விகளை எழுப்ப முன்னாள் அரசு ஊழியர்களை அணிதிரட்டுவதாகவும், குஜராத்திற்கு பிரதமர் மோடி சிறப்பு சிகிச்சை அளிக்கிறார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை உலகளாவிய ரீதியில் பிரதமர் மோடியின் படத்தைத் தாக்கவும், தொற்றுநோய்களின் படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடக ஊடகங்களில் ‘மோடி புகழை அழிக்கவும்’ தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றம் அடைந்த கொரோனாவை பற்றி சமூக வளைத்தளங்களில் பேசும் போதெல்லாம் ‘இந்திய திரிபு‘ ‘மோடி திரிபு’ என்று அழைக்கலாம்.
‘காணாமல் போன’ அமித் ஷா, ‘தனிமைப்படுத்தப்பட்ட’ ஜெய்சங்கர், ‘ஓரங்கட்டப்பட்ட’ ராஜ்நாத் சிங், ‘உணர்வற்ற’ நிர்மலா சீதாராமன் போன்ற பிற மத்திய அமைச்சர்களுக்கும் இதே போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்த தன்னார்வலர்களை வலியுறுத்துகிறது. “பாலிவுட்டில் ட்வீட், மீம்ஸ், காமிக் வீடியோக்கள், கார்ட்டூன்கள் மற்றும் மோடியை குறிவைக்கும் பிற வைரஸ் பதிவுகள் போன்ற திறமைகொண்டவர்களை அணிதிரட்டுங்கள் என்று அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதற்கிடையில், ஆனால், பாஜகவின் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இந்திய இளைஞர் காங்கிரஸ் டூல்கிட் ‘போலி எனவும் உருவப்பட்ட ஆவணம்’ என்று கூறியுள்ளது. இது காங்கிரஸ் மேற்கொண்டுள்ள பணிகளை இழிவுபடுத்தும் பாஜகவின் முயற்சி என மறுக்கிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…