அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்க வாய்ப்புள்ளது என மகந்த் நிர்த்ய கோபால் தெரிவித்தார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், கோயில் அமைப்பதற்கு மத்திய அரசு 3 மாதத்திற்குள் அறக்கட்டளையை அமைக்க வேண்டும் எனவும், அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்ட ஒதுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை அமைத்தது. கொரோனா வைரஸ் காரணமாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பணிகள் தொடங்கின.
இந்நிலையில், மத்திய அரசு அமைத்த ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிர்த்ய கோபால் கூறுகையில், ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை அடுத்த மாதம் தொடங்கப்படலாம். பூமி பூஜைக்கான பணி தொடங்கும் நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடியை அழைக்க திட்டமிட்டுள்ளது.
ஆனால், பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாரா..? என்பது குறித்து இப்போது கூறமுடியாது. நாளை நடக்கும் கூட்டத்துக்குப்பின் பிரதமர் மோடி உறுதியாகும் என கூறினார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…