மருத்துவமனைகளில் தனக்கு படுக்கை வசதி இல்லாமல் அனுமதிக்கப்படாததால் விரக்தியில் கொரோனா பாதித்த பெண்மணி தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இந்தியா முழுவதிலும் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநில அரசுகள் மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை வழங்க முடியாமல் திணறி வருகிறது. மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மருத்துவமனையில் படுக்கை வசதிகள் மற்றும் தேவையான உபகரணங்களும் இல்லாமல் மருத்துவர்கள் கவலையில் உள்ளனர்.
இந்நிலையில் புனேவில் உள்ள 41 வயதுடைய பெண்மணி ஒருவர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட நிலையில் பல்வேறு மருத்துவமனைகளிலும் சென்று மருத்துவம் செய்வதற்காக கேட்டபொழுது படுக்கை வசதி இல்லை என்பதற்காக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த பெண்மணி தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். மேலும் நோயால் அவதிப்பட்டு வாழ்வதற்கு உயிரிழப்பது மேல் என அப்பெண்மணி கூறியதாகவும் சொல்லப்படுகிறது. அப்பெண்மணியின் கணவரிடம் இதன் உண்மை தன்மை குறித்து விசாரித்த பொழுது அவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படாததால் தான் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என கூறியுள்ளார்.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…