டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்…! நாய்களை தகனம் செய்யும் இடங்களில் மனிதர்களை தகனம் செய்ய ஏற்பாடு…!

Published by
லீனா

டெல்லியில், துவாரகா பிரிவு 29 இல் உள்ள ஒரு நாய் தகனம் செய்யும் இடத்தில், மனிதர்களை தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றால்,  மருத்துவமனையிலேயே படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் சப்ளை பற்றாக்குறை காரணமாகவும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் நாளொன்றுக்கு 300-க்கும் மேற்பட்ட  கொரோனா மரணங்கள் நிகழ்கின்றன. இதனால் அங்கு தகனம் செய்வதற்கு கூட இடமில்லாத படி திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் துவாரகா பிரிவு 29 இல் உள்ள ஒரு நாய் தகனம் செய்யும் இடத்தில், மனிதர்களை தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

டெல்லி மாநகராட்சி துவாரகா பிரிவு 29 இல் மூன்று ஏக்கர் நிலத்தில், நாய்களை  தகனம் செய்யும் தளம் ஆறுமாதங்களுக்கு முன்பதாக கட்டப்பட்டது. ஆனால் இன்னும் அந்த தளம் பயன்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் தற்போது தற்காலிகமாக  மனிதர்களுக்கு இறுதி சடங்கு செய்யும் தளங்களை உருவாக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் தகனம் செய்யப்படும் சடலங்களின் எண்ணிக்கை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் 800-க்கும் மேற்பட்ட சடலங்கள் வரை தகனம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 1000 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டெல்லியில் அதிகாரிகள் தகனம் செய்வதற்கான இடங்களை முன்கூட்டியே தயார்படுத்தி வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

15 minutes ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

52 minutes ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

1 hour ago

அங்கன்வாடி மையங்கள் மூடலா? விளக்கம் கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…

2 hours ago

ஜாமீன் கேட்ட ஸ்ரீகாந்த், கிருஷ்ணா…நாளை தீர்ப்பு சொல்லும் சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…

2 hours ago

எலான் மஸ்க் கட்சி தொடங்கியது முட்டாள்தனமானது…டொனால்ட் டிரம்ப் விமர்சனம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…

3 hours ago