இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால், மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைககள் எடுத்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கையில் கேரளா 2ம் இடத்தில் உள்ளது. கேரளாவில் இதுவரை 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள கேரளா முதல்வர் பினராயி விஜயன் ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கி ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். அதில் ரூ.2,000 கோடி வறுமை ஒழிப்பு திட்டமான குடும்பஸ்ரீ மூலம் கடன் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த ரூ.2,000 கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் 2 மாதத்திற்கான நலத்திட்ட ஓய்வூதியத்தை இந்த மாதமே வழங்க வேண்டும் என்று அறிவித்தார். நலத்திட்டம் ஓய்வூதியம் பெற தகுதியில்லாத குடும்பங்களுக்கு ரூ.1000 வழங்க, ரூ.1,320 கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேவைப்படும் குடும்பங்களுக்கு உணவு தானியங்கள் வழங்க ரூ.100 கோடியும், ரூ.20 குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக ரூ.50 கோடியம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.பின்னர் சுமார் ரூ.14,000 கோடி கடன் நிலுவையை மாநில அரசு ஏப்ரல் மாதத்திற்குள் கட்டிமுடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…