ஜம்மு காஷ்மீரில் தனது முதலாளியை சுமந்து வந்த குதிரை, கொரோனா அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், மேலும் 7,293 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 158,086 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4,534 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் கொரோனா தோற்றால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள ஷோபியானிலிருந்து ரஜெளரி மாவட்டதிற்கு சாலை வழியாக குதிரையும், அதனின் முதலாளியும் வந்து சேர்ந்தனர். அங்கு வந்த அவரை தனிமைப்படுத்தப்படும் மையத்தில் தங்கவைக்கப்பட்டு, அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
மேலும், அவர் வந்த குதிரையையும் தனிப்படுத்தப்பட்டு, கால்நடை மருத்துவர்கள் அதற்க்கு கொரோனா பரிசோதனை நடத்தினர். அப்பொழுது அதற்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஏளினும், அதனை மற்ற குதிரைகளுடன் வைக்காமல் அதனை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது, மேலும், அதனின் முதலாளிக்கு இன்னும் முடிவுகள் வெளிவராதது குறிப்பிடத்தக்கது.
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…