பாஜக தலைவர், மருமகனின் திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் வழிகாட்டுதல்களை மீறியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் மக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும், கட்டுப்பாட்டுடன் இருக்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் வல்சாத் மாவட்டத்தில் பாஜக தலைவர், மருமகனின் திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் வழிகாட்டுதல்களை மீறியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், ‘திருமணத்தில் விருந்தினர்கள் நடனமாடுவதை கண்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முகமூடி இல்லாமல் கூடியிருந்ததாகவும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். திருமணத்தில் கலந்து கொண்ட மேலும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…