“கொரோனா மறந்தாச்சு.. இயல்பு நிலை வந்தாச்சு.. திரையரங்கு என்னாச்சு.. “-முதல்வரிடம் கேள்வி எழுப்பி போஸ்ட்ர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்.!

Published by
Ragi

கொரோனா மறந்தாச்சு, இயல்பு நிலை வந்தாச்சு, திரையரங்கு என்னாச்சு என்ற வசனங்களுடன் கூடிய போஸ்ட்ரை மதுரையில் தளபதி ரசிகர்கள் ஒட்டி திரையரங்குகள் திறப்பது குறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் சூர்யாவின் சூரரை போற்று படத்தினை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து மாஸ்டர் படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவியது. இதனை கண்டித்து திரையரங்குகள் திறந்தவுடன் மாஸ்டர் படம் ரிலீஸாகும் என்று தெரிவித்தனர். ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த படம் தியேட்டர் திறக்கப்படாததால் தள்ளி போய் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மதுரையில் உள்ள தளபதி ரசிகர்கள் திரையரங்குகள் திறப்பது எப்போது என்று முதல்வர் பழனிசாமிக்கு கேள்வி எழுப்பிய வண்ணம் போஸ்ட்ர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.

தளபதி விஜய்யின் ரசிகர்கள் எப்போதும் வித்தியாசமான முறையில் போஸ்ட்ர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். சமீபத்தில் கூட விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண நாளை முன்னிட்டு மதுரை ரசிகர்களின் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்ட்ரில் மக்கள் இயக்கத்தின் புரட்சித் தலைவரே மற்றும் புரட்சி தலைவியே என்று கூறி சங்கீதாவை ஜெயலலிதா போலவும், விஜய் அவர்களை எம். ஜி. ஆர் போலவும் சித்தரித்து ஒட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சமீபத்தில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்த போதிலும் திரையரங்குகள் திறப்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த மதுரையில் உள்ள ரசிகர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படத்தையும், அதிமுகவின் கொடி வண்ணத்தையும் பயன்படுத்தி ‘கொரோனா மறந்தாச்சு, இயல்பு நிலை வந்தாச்சு, திரையரங்கு என்னாச்சு என்ற வசனங்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது அந்த போஸ்ட்ர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Ragi

Recent Posts

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

45 minutes ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 hour ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

2 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

2 hours ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

3 hours ago

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்!

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…

3 hours ago