ஹரியானாவில் 300-க்கும் மேற்பட்ட சடலங்களுக்கு இறுதி சடங்கு செய்த பிரவீன் குமார் என்பவர் கொரோனாவால் உயிரிழப்பு.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சமீப நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது ஒரு சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கூட முன்வராத நிலையில், தன்னார்வலர்களும், காவலர்களும் தாமாகவே முன்வந்து மனிதாபிமானத்தோடு அவர்களுக்கு இறுதி சடங்குகளை செய்து வைக்கின்றனர்.
அந்த வகையில், ஹரியானா மாநிலம் ஹிசார் நகராட்சியில் கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகளை செய்து வந்த நகராட்சி ஊழியர் பிரவீன் குமார் (43) அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிரவீன்குமார் நகராட்சிக்குட்பட்ட சஃபாய் கரம்ச்சாரி ஒன்றியத்தின் தலைவராக உள்ளார். கடந்த ஆண்டு கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை 300-க்கும் மேற்பட்ட சடலங்களுக்கு இறுதிச்சடங்கு செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இவரது மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து, ரிஷியில் உள்ள மயானத்தில் பிரவீன் குமாரை உடலுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நகராட்சி ஊழியர்கள் இறுதி சடங்குகளை செய்து நல்லடக்கம் செய்துள்ளனர்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…