மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளா? – அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

Published by
Edison

நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்ட நிலையில்,கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தன.இதனைத் தொடர்ந்து,கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் சற்று சரிந்து காணப்பட்டதால் கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டன.இந்த நிலையில்,கொரோனா தொற்று வழக்குகள் தற்போது மீண்டும் அதிகரித்து ஒரு நாளில் 2,527 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட சனிக்கிழமை  தரவுகளின்படி,இந்தியாவின் மொத்த கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 4,30,54,952 ஆக உயர்ந்துள்ளது,அதே நேரத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 15,079 ஆக அதிகரித்துள்ளன.

இதனிடையே,தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.மாறாக,விதியை மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.அதைப்போல பல மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு பின்பற்ற வேண்டிய கட்டுபாடுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 27 ஆம் தேதி (புதன்கிழமை) அனைத்து மாநில முதல்வர்களை சந்தித்து ஆலோசனை உள்ளார்.காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

குறிப்பாக,நாட்டில் மீண்டும் நிலவும் கொரோனா பரவல் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் விளக்கம் அளிக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து,நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

4 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

4 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

4 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

6 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

6 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

6 hours ago