டெல்லியில் விவசாய போராட்டத்திற்காக சிங்கு எல்லை பகுதியில் பணியில் இருந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா ,குஜராத் , உத்தரப்பிரதேசம் மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 16-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு சிங்கு எல்லை பகுதியில் பாதுகாப்பு கொடுத்து வந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
டெல்லியின் சிங்கு எல்லை பகுதியில் பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது .அதில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரில் ஒருவர் டிசிபி கௌரவ் மற்றும் மற்றொருவர் கூடுதல் டிசிபி-யாக பணியாற்றி வந்த கன்ஷ்யம் பன்சால் என்று கூறப்படுகிறது . தற்போது இருவரும் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…