குழந்தைகளுக்கான கோவாக்சின் கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வு முடிவுகள் செப்டம்பருக்குள் வரும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது மூன்றாவது அலை பரவக் கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் குழந்தைகளை பாதுகாக்கும் வண்ணம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறது. குழந்தைகளுக்கான கோவாக்சின் கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வு முடிவுகள் செப்டம்பருக்குள் வரும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி மட்டுமல்லாது, இந்திய மருந்து நிறுவனமான ஜைடஸ் காடிலாவின் குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கான சோதனைகளும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…