மனிதர்கள் மீது கொரோனா தடுப்பூசி பரிசோதனை – பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை!

Published by
Rebekal

தேர்ந்தெடுக்கப்பட்ட 18 மனிதர்கள் மீதான கொரானா தடுப்பூசி பரிசோதனையை ஜூலை 13 முதல் 18 வரை நடைமுறைப்படுத்தவுள்ளது பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை.

உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் கடந்த சில மாதங்களாகவே குறையாத நிலையில், தற்பொழுது இதற்கான தீர்வாக பல மருத்துவமனை ஆய்வுக்கூடங்களில் மருந்துகள் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனையும் நடைபெற்று கொண்டுள்ளது. இந்நிலையில் பாட்னாவிலுள்ள எய்ம்ஸ்  மருத்துவமனையிலும் தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளது.

இதனை வைத்து விலங்குகளிடம் சோதனை நடைபெற்று வெற்றி அடைந்ததை அடுத்து தற்பொழுது 18 தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனை தன்னார்வலர்களை வைத்து வருகின்ற ஜூலை 13 முதல் 18 வரை சோதனை நடைபெறவுள்ளது. இச்சோதனையில் 18 முதல் 55 வயதுக்குள் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

தடுப்பூசியின் முதல் டோஸுக்குப் பிறகு, நோயாளி 2 முதல் 3 மணி நேரம் மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பார், பின்னர் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். சோதனையை முடிக்க நோயாளிகளுக்கு மொத்தம் மூன்று ஊசி செலுத்தப்படும். கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையை நடத்த ஐ.சி.எம்.ஆர் தேர்ந்தெடுத்த 12 நிறுவனங்களில் எய்ம்ஸ் பாட்னாவும் ஒன்றாகும்.

Published by
Rebekal

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

12 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

13 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

14 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

14 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

15 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

16 hours ago