கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பேசினாலே தொற்று பரவும் அபாயம் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்பொழுது தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான புதிதாக பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக மூவாயிரத்துக்கும் அதிகமான மக்கள் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனாவிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தொற்று பாதிப்பு உள்ள ஒரு நபர் தும்மினாலும் இருமினாலும் எச்சில் வழியாக கிருமி காற்றில் பரவி மற்றவர்களை பாதிக்கும் என இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர்கள் பேசினாலே தொற்று பரவும் அபாயம் உள்ளது அதிர்ச்சி தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதாவது, தொற்று பாதித்த ஒரு நபர் தும்மல் அல்லது இருமல் போன்றவற்றை செய்யும் பொழுது அவரிடமிருந்து வெளியாக கூடிய பெரிய எச்சில் துகள்கள் 2 மீட்டர் தூரத்திற்குள் கீழே விழுந்து விடுமாம்.
ஆனால் அதிக நேரம் உயிருடன் இருக்கக் கூடிய ஏரோசோல் என அழைக்கப்படக் கூடிய சிறிய எச்சில் துகள்கள் காற்றில் 10 மீட்டர் தூரம் வரை பரவக் கூடியது எனவும் தெரிவித்துள்ளார். இந்த ஏரோசோல் துகள்கள் நாம் பேசும் போது தான் அதிகளவில் வெளியாகுமாம். எனவே தான் மக்கள் அதிகமாக கூட கூடிய இடங்கள் காற்று வசதி இல்லாத இடங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வெளிவரும் ஏரோசோல் துகள் மூலம் கொரோனா மக்களுக்கு வேகமாக பரவும் எனவும் கூறப்பட்டுள்ளது.
காற்றோட்டமுள்ள இடங்களில் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு குறைவாக இருப்பதால் வீடுகளில் உள்ள ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிந்தவடை எப்பொழுதும் முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் வழக்கப்படுத்திக் கொண்டால் கொரோனாவிலிருந்து நாம் தப்பலாம்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…