தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியது.
தெலுங்கானாவில் 49,259 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 24 மணி நேரத்தில் இது 50 ஆயிரத்தை கடந்து விடும். நகர்ப்புறங்களில் சமூகப் பரவல் தொடங்கியுள்ளது என்று மாநில சுகாதாரத் துறை இயக்குநர் சஞ்சீவ ராவ் கூறியுள்ளார். மேலும், ஹைதராபாத்தில் போலீஸார், ஊடகத் துறையினர், சுகாதார துறையினர், துப்புரவு தொழிலாளர்கள் என பலருக்கும் கரோனா வைரஸ் பரவியுள்ளது.
இந்நிலையில், மாநில சுகாதார சேவைகளின் உயர் மேலாளர் டாக்டர் சீனிவாச ராவ் அவர்கள் கூறுகையில், அடிப்படை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாத “பொறுப்பற்ற மக்கள்” மீது சீனிவாச ராவ் குற்றம் சாட்டினார். பெரும்பான்மையான மக்கள் கவனமாக இருக்கும்போது, இல்லாத மற்றவர்களும் உள்ளனர் என்று கூறினார்.
மேலும், வெளியில் வேலைக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற செயல்பாடுகளில் தவறுகின்றனர் என்றும், காய்ச்சல், சளி அல்லது பிற அறிகுறிகள் போன்ற உடல்நலக்குறைவு அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம் என்றும் அவர் மக்களை கேட்டுக்கொண்டார்.
மேலும், உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அருகிலுள்ள சமூக சுகாதார மையம் அல்லது மருத்துவமனைக்குச் சென்று தங்களை பரிசோதிக்குமாறும் கூறியுள்ளார்.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…