மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 1008 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் எண்ணிக்கை 11,506 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால் நாளையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கை மே 17 ஆம் தேதி வரை நீடிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, சிவப்பு, ஆரஞ்சி, பச்சை என 3 மண்டலமாக பிரித்து அதற்கான கட்டுப்பாடு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதனிடையே நாடு முழுவதும் கொரோனா வைரசால் 37,336 பாதிக்கப்பட்டு, 1218 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து இதுவரை 9951 பேர் மீண்டுள்ளனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தண்டியுள்ளது. அதாவது, நேற்று ஒரே நாளில் 1008 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் எண்ணிக்கை 11,506 ஆக அதிகரித்துள்ளது. அதே போல, கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 485 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்று மும்பை, புனே போன்ற பகுதிகளில் வைரஸின் தீவிரம் அதிகமாக இருப்பதாகவும் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…