மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 1008 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் எண்ணிக்கை 11,506 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால் நாளையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கை மே 17 ஆம் தேதி வரை நீடிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, சிவப்பு, ஆரஞ்சி, பச்சை என 3 மண்டலமாக பிரித்து அதற்கான கட்டுப்பாடு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதனிடையே நாடு முழுவதும் கொரோனா வைரசால் 37,336 பாதிக்கப்பட்டு, 1218 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து இதுவரை 9951 பேர் மீண்டுள்ளனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தண்டியுள்ளது. அதாவது, நேற்று ஒரே நாளில் 1008 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் எண்ணிக்கை 11,506 ஆக அதிகரித்துள்ளது. அதே போல, கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 485 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்று மும்பை, புனே போன்ற பகுதிகளில் வைரஸின் தீவிரம் அதிகமாக இருப்பதாகவும் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…