உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சுமார் 127 நாடுகளில் பரவியுள்ளது. ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இத்தாலி, குவைத், இலங்கை மற்றும் ருவாண்டா என 276 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் ஈரானில் 255, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 12, இத்தாலி 5, ஹாங்காங், குவைத், ருவாண்டா மற்றும் இலங்கையில் தலா 1 உட்பட 276 இந்தியர்கள் வெளிநாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என டெல்லி மக்களவையில் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோன வைரஸ் இந்தியாவில் 147 பேரை தாக்கியுள்ளது. மேலும் டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை சேர்ந்த 3 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு மாநிலமாக பரவி வரும் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் மத்திய, மாநில அரசுகள் வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் என பொது இடங்களில் கூட்டமாக கூடும் அனைத்து இடங்களையும் சில மாநிலங்களில் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…