உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக கொரோனா உறுதியான 172 பேரில் 42 பேர் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவர்கள் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே உத்தர பிரதேச மாநிலத்தில் ஏற்கனவே 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் தப்லிகி ஜமாத் என்ற மத அமைப்பு சார்பில் முஸ்லிம் மத குருக்கள் பங்கேற்ற மாநாடு கடந்த மாதம் 8 முதல் 20 வரை நடைபெற்றது. இதில் இந்தியா மட்டுமில்லாமல் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகம், ஆந்திரா, காஷ்மீர், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதியில் இருக்கும் இஸ்லாமியர்கள் பங்கேற்றுள்ளனர்.
பின்னர் மாநாட்டில் பங்கேற்று ஊர் திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து கொரோனா சுயபரிசோதனை செய்யவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து மாநாட்டில் பங்கேற்று ஊர் திரும்பியவர்களில் தமிழகத்தில் 264 பேருக்கும், ஆந்திராவில் 40க்கும் மேற்பட்டோர் மற்றும் தற்போது உத்ரபிரேதேசத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, இன்று (ஜூன் 2, 2025) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த…
சென்னை : தமிழ் திரையுலகில் மதயானைக் கூட்டம் மற்றும் ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் விக்ரம்…
அகமதாபாத் : 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பெங்களூர் அணிக்கு எதிரான முதல் தகுதிச்சுற்று போட்டியில் விளையாடியபோது…
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…