பி.எஸ்.எல்.வி சி50 ராக்கெட்டின் கவுண்ட் டவுன் தொடக்கம். நாளை மாலை 3.45 மணிக்கு விண்ணில் பாய்கிறது இஸ்ரோ அறிவித்துள்ளது.
இஸ்ரோ பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.01 என்ற தகவல் தொடர்பு செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையமான சதிஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் நாளை மாலை 3.45 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த ஆண்டு இஸ்ரோ ஏவும் இரண்டாவது ராக்கெட் பி.எஸ்.எல்.வி சி50 சிஎம்எஸ் -01. இதற்கான கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைகோள், கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, சி-பாண்டு ஆகிய பணிகளுக்கு தேவையான தரவுகளை சேகரிப்பதற்கு விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பட்டு உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. இது இந்தியாவின் 52-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பது குறிப்பிடப்படுகிறது.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…