Representative Image
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் 5 ரூபாய் கொடுத்து மீதம் ரூ.3 சில்லறை தராததால் பிரஃபுல்ல குமார் தாஷ், என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியதால், கடை உரிமையாளருக்கு வாடிக்கையாளருக்கு ரூ.25,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 28 அன்று ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரஃபுல்ல குமார் தாஷ், அம்மாநில நகரில் ஜெராக்ஸ் எடுக்க வேண்டுமென 5 ரூபாய் கொடுத்துவிட்டு மீத சில்லறையை கேட்டதும், ‘பிச்சைக்காரன் கூட ரூ.3 வாங்கமாட்டான்’ என கடைக்காரர் அவமானப்படுத்தியதாக கூறி நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
ஐந்து ரூபாயைக் கொடுத்து, மூன்று ரூபாயைத் திருப்பித் தருமாறு கடைக்காரரிடம் கூறினார், அவர் எடுத்துக்கொண்ட ஜெராக்ஸின் விலை ரூ.2 ஆகும். ஆனால், கடைக்காரர் மீதி பணத்தைத் திருப்பித் தர மறுத்து, அவரை அவமானப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, கடைக்காரர் 5 ரூபாயை திருப்பிக் கொடுத்ததோடு, “அந்தப் பணத்தை பிச்சைக்காரருக்கு நன்கொடையாகக் கொடுத்தேன்”என்று கூறி அவரை அவமானப்படுத்தினார். இந்த சம்பவம் கடைக்கு சென்ற வாடிக்கையாளரான பிரஃபுல்ல குமார் தாஷ் மன அழுத்தத்தையும் சிரமத்தையும் சந்தித்துள்ளார்.
இந்நிலையில், கடைக்காரர் மீது வழக்குப் பதிவு செய்யமாறு காவல்துறையிடம் புகார் அளித்தநிலையில், இந்த புகாரின் அடிப்படையில் கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், தனது வாடிக்கையாளருக்கு 3 ரூபாயை திருப்பித் தராமலும், அவரை அவமானப்படுத்தியதால் கடை உரிமையாளருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. உத்தரவின்படி, கடைக்காரர் 30 நாட்களுக்குள் அபராதம் செலுத்தத் தவறினால், அவர் ஆண்டுக்கு 9% வட்டி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…