கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறன் 120 மில்லியனாக அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை பாதித்து வருகிறது. இதன் காரணத்தால் இதிலிருந்து காத்து கொள்ள கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதில் இந்தியா கோவிஷீல்டு, கோவேக்சீன் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது.
தற்போது கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தித்திறனை 120 மில்லியனாக அதிகரிக்கப்படும் என்று எழுத்துபூர்வமாக மத்திய அரசு, மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளனர்.
இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்துள்ளதாவது,
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியின் உற்பத்தியாளர்கள் தெரிவித்த தகவல் படி, மாதாந்திர உற்பத்தி திறனை 110 மில்லியன் டோஸிலிருந்து 120 மில்லியன் டோஸாக அதிகரிக்கப்படவுள்ளது. மேலும், கோவேக்ஸீன் கொரோனா தடுப்பூசியின் உற்பத்தியும் 25 மில்லியன் டோஸிலிருந்து 58 மில்லியன் டோஸாக அதிகரிக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…