இந்தியாவின் தேசிய விலங்காக பசுவை அறிவிக்க வேண்டும் – அலகாபாத் உயர்நீதிமன்றம்!

Published by
Rebekal

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் எனவும், பசுவை மதித்தால் மட்டுமே நாடு செழிக்கும் எனவும் அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜாவேத் என்பவர் மீது பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இது குறித்து நீதிபதி சேகர் குமார் யாதவ் தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு, பசுக்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கான மசோதாவை அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்துள்ளது.

மேலும் பசு பாதுகாப்பு பணி ஒரு மதத்தின் பணி மட்டுமல்லாமல், பசு இந்தியாவின் கலாச்சாரம். மதத்தை பொருட்படுத்தாமல் நாட்டில் வாழக்கூடிய ஒவ்வொரு குடிமகனின் கலாச்சாரத்தையும் காப்பாற்றும் பணி இது என தெரிவித்துள்ளது. மேலும் வெவ்வேறு மதங்களை சார்ந்த மக்கள் வாழக்கூடிய இந்திய நாட்டில், அவர்கள் வித்தியாசமாக வழிபடலாம். ஆனால் அவர்களின் சிந்தனை நாட்டிற்கு ஒன்று தான் எனவும் நீதிமன்றம் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்தில் அரசு கோசாலைகளை கட்டுகிறது. ஆனால் பசுவை பராமரிக்க வேண்டிய மக்கள் மாடுகளை கவனிப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனியார் கோசாலைகளும் இன்று போலித்தனமானதாக மாறிவிட்டதாகவும், பொது மக்களிடம் நன்கொடை பெற்று அரசாங்கத்தின் உதவியுடன் பசு ஊக்குவிப்பு என்ற பெயரில் போலித்தனமாக தொழில் செய்கிறார்கள் எனவும், சொந்த நலனுக்காக அதை செலவிட்டு பசுவை கவனித்துக் கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பசுவை மதித்தால் மட்டுமே நாடு செழிக்கும். இந்திய கலாச்சாரத்தின் அங்கமான பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் எனவும் அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Recent Posts

“நான் தப்பியோடியவன் என்று சொல்லுங்க, ஆனால் நான் மோசடிக்காரன் அல்ல” – விஜய் மல்லையா.!

“நான் தப்பியோடியவன் என்று சொல்லுங்க, ஆனால் நான் மோசடிக்காரன் அல்ல” – விஜய் மல்லையா.!

டெல்லி : வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள விஜய் மல்லையாவை…

4 hours ago

11 பேர் உயிரிழந்த விவகாரம்: ‘கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டாம்’ – உயர் நீதிமன்றம்!

பெங்களூரு : சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மறு…

5 hours ago

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு.!

விழுப்புரம் : கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது…

5 hours ago

கொரோனா பரவல்: ”கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய வேண்டும்” – பொது சுகாதாரத்துறை.!

சென்னை : சிங்கப்பூர், ஹாங்காங்கில் பரவி வந்த கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமெடுக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும்…

6 hours ago

அனைத்து விதமான கிரிக்கெட்டிற்கும் குட் பை சொன்ன பியூஷ் சாவ்லா.!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

டெல்லி : இந்தியாவின் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா இன்று அனைத்து வகையான…

6 hours ago

ஒரே ஒரு ஆட்டோ மாசம் ஓஹோ சம்பாத்தியம்.., லட்சம் வருமானம் பார்க்கும் ஓட்டுநர்.! அப்படி என்ன செய்கிறார்?

மும்பை : ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஒரு மாதத்தில் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆனால், மும்பையைச்…

7 hours ago