மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணை உடைந்ததற்கு காரணம் நண்டுகள் என நீர் சேமிப்பு துறை அமைச்சர் தானாஜி கூறியுள்ளார். கடந்த சில நாள்களாக மும்பையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில் ஜூலை 3-ம் தேதி பலத்த மழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணை உடைந்தது.அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் 7 கிராமங்களில் புகுந்தது. அதில் அங்கு இருந்த பல வீடுகள் தண்ணீரில் அடித்து சென்றது.
மேலும் தண்ணீரில் 24 பேர் அடித்து செல்லப்பட்டனர்.அதில் 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. இந்நிலையில் அணை உடைவதற்க்கு காரணம் நண்டுகள் தான் என நீர் சேமிப்பு துறை அமைச்சர் சர் தானாஜி கூறியுள்ளார்.
இதை பற்றி செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் தானாஜி , ஏராளமான நண்டுகள் அணையின் கரையை வலுவிழக்க செய்து விட்டது என உள்ளூர் மக்கள் பல முறை கூறியுள்ளனர். அதற்க்கு அதிகாரிகள் சில நடவடிக்கையும் எடுத்தனர்.
மேலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்ததால் கூட உடைந்து இருக்கலாம். நீர் பிடிப்பு பகுதியில் 8 மணி நேரத்தில் 192 மி.மீ மழை பெய்தது.மேலும் 8 மணி நேரத்தில் 8 மீட்டர் நீர் உயர்ந்ததாகவும் தகவல் கிடைத்து உள்ளது என கூறினார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…