இந்தியாவில் தற்போது சைபர் குற்றங்கள் 500 சதவீதம் அதிகரித்துள்ளதாக நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்கள் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் இணையம் மூலம் நடந்த சைபர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் கொரோனா பெருந்தொற்று பேரிடர் காரணமாக மக்களின் ரொக்கப்பணம் கையாள்வது குறைந்து டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார். எனவே டிஜிட்டல் பண வர்த்தகம் மூலம் தனிமனித தகவல்கள் திருடப்படுவதாக அப்போது அவர் தெரிவித்தார். இந்த சூழலை பயன்படுத்தி சமூக விரோதிகள் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இச்செயல்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சைபர் குற்றங்கள் பரவாமல் தடுக்க தேசிய இணைய பாதுகாப்பு உத்தி 2020 என்ற புதிய திட்டத்தை அரசு துவங்கி உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் நம்பகமான, பாதுகாப்பான இணைய வசதி உறுதி செய்யப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…