உயிருடன் இருந்த நாயை வண்டியின் பின்புறம் கட்டி இழுத்து சென்ற இருவர் மீது விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் இருசக்கர வாகனத்தில் நாயை கட்டியவாறு இரண்டு பேர் தரதரவென அப்படியே இழுத்து செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. இந்நிலையில் இதுகுறித்து பெண்மணி ஒருவர் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீடியோவில் இருக்கும் வண்டி நம்பரை வைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதில் ஹித்தேஸ் படேல் என்பவர் தான் இந்த நாயை வண்டியில் கட்டி இழுத்துச் சென்றவர் என்பதை கண்டறிந்து தற்போது கைது செய்துள்ளனர்.
மேலும், அவருடன் நடத்திய விசாரணையில் அவர் தூய்மை பணியாளராக பணியாற்றுபவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவருடன் இருந்த அவரது நண்பர் தற்போது தலைமறைவாகி இருக்கும் நிலையில், அந்த நாய் உயிர் இழந்து விட்டது. அதனை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது பகிரப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். ஆனால் வீடியோவை பார்த்த விலங்கு நல ஆர்வலர்கள் நாய் உயிருடன் இருப்பதை வீடியோவில் தெளிவாக பார்க்க முடிவதாகவும், அவர்கள் அந்த வீடியோவில் பேசும் பொழுது கூட நாய் இறந்ததாக கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ஹித்தேஸ் மற்றும் தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் நண்பர் மீது விலங்குகள் வதை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் சாலையில் இழுத்து சென்ற நாய் தற்பொழுது உயிர் இழந்து விட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…